Sunday, 5 January 2020







05.01.2019          

இன்று 05-01-2020 தென்காசி கிரீன்பார்க் ஹோட்டலில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. 

        சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், மக்களுக்காக சங்கத்தின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய சமூகப்பணிகள் குறித்தும்,உறுப்பினர் சேர்க்கை குறித்தும்   விவாதிக்கப்பட்டது. 

        ஜனவரி 12-ம் தேதி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கத்தின் முதல் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெறுகிறது. அன்று சங்கத்தின் தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் திரளான தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். 

          தென்காசி கிரீன்பார்க் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் சந்திரன் ஸ்ரீ, சம்பத், பிரம்மநாயகம், அந்தோணிராஜ், சேலம் கர்ணன், சாம்பவர்வடகரை முருகேசன் , பரமசிவன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

       நீங்களும் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்பினால் கீழ்கண்ட கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

சம்பத் - 9791865513
சந்திரன்ஸ்ரீ - 9344500490
ப்ராஹ்மணாயகம் -  9585979392

தலைமை
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கம்
அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம்